tag:blogger.com,1999:blog-1825655955450082388.post4896349104658638677..comments2023-10-31T19:45:52.894+11:00Comments on ஊக்கமது கைவிடேல்: பிறவி மர்மங்கள்: 12 (உண்மை நிகழ்வுகள்)Packirisamy Nhttp://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1825655955450082388.post-37403178722355678112013-08-05T22:45:57.739+10:002013-08-05T22:45:57.739+10:00பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசே...பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்<br />இறைவன் அடிசேரா தார். - குறள் எண்: 10<br /><br />என்ற குறளுக்கு முழு விளக்கமாகவே இந்த பதிவைப் பார்க்கின்றேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-40184785521729807792013-08-02T10:32:48.388+10:002013-08-02T10:32:48.388+10:00நீங்கள் கூறும் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. கான...நீங்கள் கூறும் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. கான்செப்டை மாற்றாமல் இடம், பொருளை நான் மாற்றியிருக்கலாம். இனிமேல் இப்படி இருப்பதை தவிர்க்கிறேன்.<br /><br />கெமிக்கலை சாப்பிட்டு, மன உளர்ச்ச்சியுடன் வாழ்கிறோம். கண்ட, கண்ட மருந்துகளையும் சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இப்படிப்பட்ட தளங்களும் necessary evil ஆகிவிட்டது.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-91119658973571952352013-08-02T10:32:07.297+10:002013-08-02T10:32:07.297+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி. கீதா...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி. கீதா சாம்பசிவம். <br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-87669118360516896882013-08-02T10:31:47.084+10:002013-08-02T10:31:47.084+10:00கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி ஐயா!
...கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி ஐயா! <br />இதுதான் எனது முதல் மொழிபெயர்ப்பு. இன்னும் சில புத்தகங்களை மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது.<br /><br />ஆமாம். மிகவும் பயனுள்ள தளம். நிறைய விஷயங்களை மருத்துவர் உதவியில்லாமல் அறிந்துகொள்ள முடியும்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-69619821505199330422013-08-02T10:31:07.456+10:002013-08-02T10:31:07.456+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
என் மக...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! <br /><br />என் மகனுக்கு நான்கு வயது நடக்கும்பொழுது, தன் அக்காவிடம் அதிகம் பொறாமைப்படுவான். அப்படி நினைக்கக் கூடாது என்றால், எனக்கு அப்படித்தான் நினைப்பு வருகிறது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அழுதது நினைவுக்கு வருகிறது. இதே குணம் எனக்கும் இருந்தது.<br />எனவே சில தீய குணங்களும், நம்முடைய உதவி இல்லாமல் பிறப்பிலேயே வந்துவிடுகிறது என்று நம்புகிறேன். அது தீய குணம் என்று தெரிந்த பிறகு, அதனைத் தொடர்வது தவறு என்று கருதுகிறேன். இது சம்பந்தமாக வில்லியனூர் ராமச்சந்திரன் என்ற நியூரோசர்ஜனுடைய வீடியோக்களை நேரமிருந்தால் பார்க்கவும். தற்போதைய உலகில், முக்கியமான 100 விஞ்ஞானிகளில் அவர் ஒருவர். அறிவியல் சார்ந்து இதனைக் கண்டுபிடித்தால், நிறையபேர் குற்றத்திலிருந்து தப்பிக்கத்தான் இது உதவும் என்று நினைக்கிறேன்.<br /><br />ஆமாம். அடுத்தவருடைய அறிவுரையானாலும் ஒருவருடைய செயல்களுக்கான பலன்களையும் விளைவுகளையும் அவரேதான் அனுபவிக்க வேண்டும்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-61391978615594129552013-08-01T23:05:20.755+10:002013-08-01T23:05:20.755+10:00நகைச்சுவையாகவே இருந்தாலும் துணுக்கை என்னால் ரசிக்க...நகைச்சுவையாகவே இருந்தாலும் துணுக்கை என்னால் ரசிக்க இயலவில்லை. தளத்தின் சுட்டிக்கு நன்றி. இந்தத் தளத்துக்குச் செல்லும் அவசியம் ஏற்படாது என நம்புகிறேன். மேலே இருக்கிறவனை விட வேற் பாதுகாப்பு என்ன வேண்டும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-7850718265337299572013-08-01T23:03:47.928+10:002013-08-01T23:03:47.928+10:00// அங்கு ஒரு நிலையில் நமது முடிந்துபோன பிறவியின் ந...// அங்கு ஒரு நிலையில் நமது முடிந்துபோன பிறவியின் நினைவுகளைக் காண அனுமதி உண்டு. அங்கு காத்திருக்கவேண்டும். வரப்போகும் பிறவிக்கு என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று அங்குதான் முடிவு செய்யப்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்தியேக தீயகுணம் உண்டு. பொறாமை, பேராசை எதுவாகவும் இருக்கலாம். நாம் அத்தகைய தீயகுணத்தை வரும் பிறவியில் சரிசெய்ய வேண்டும். அப்படி சரிசெய்யாத பட்சத்தில், அந்த தீயகுணத்தையும், வேறு தீய குணங்களையும் அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்ல நேரிடும். ஒருவருடைய சுமை அதிகமாகிக் கொண்டே செல்ல வாய்ப்புகள் உள்ளது. சரிசெய்யாதவர்களுக்கு அடுத்த பிறவி இன்னும் சிரமமானதாக இருக்கும். சரி செய்தவர்களுக்கு மறுவாழ்வில் சிரமம் அதிகம் இருக்காது. எனவே உன் எதிர்கால வாழ்வை தேர்ந்தெடுப்பது உன் கையில்தான் உள்ளது. உன் வாழ்க்கையின் பொறுப்பு உன்னிடமே உள்ளது. நீயே தேர்ந்தெடுக்கிறாய்.” //<br /><br />அருமை. அதோடு எத்தனை உண்மை! நாம் இன்று கஷ்டப்படுகிறோம் எனப் புலம்பி என்ன பயன்! நம் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு என்பது எத்தனை தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கிறது! ஆச்சரியமான விஷயம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-40489532266626743152013-08-01T16:51:30.627+10:002013-08-01T16:51:30.627+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி மதிப்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி மதிப்புக்குரிய ACE, அவர்களே! ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் டாக்டர்.வைஸ், கேத்தரின் வழியாக வழிகாட்டி ஆன்மாக்கள் அவருக்கு அறிவுரைகள் தருவதாகக் குறிப்பிடுகிறார். அவருக்காகவே வழிகாட்டி ஆன்மாக்கள் செய்திகள் தருவதாகவும் கூறுகிறார். <br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-35474959220993195172013-08-01T16:50:55.886+10:002013-08-01T16:50:55.886+10:00
தகவலுக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.
அன்புட...<br />தகவலுக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-58695205881904194492013-08-01T16:50:39.977+10:002013-08-01T16:50:39.977+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி திரு.திண்ட...வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.<br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-8626250988274345042013-08-01T16:50:14.407+10:002013-08-01T16:50:14.407+10:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு....வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி திரு. கவியாழி கண்ணதாசன்.<br /><br />வழிகாட்டி ஆன்மாவின் கூற்றுப்படி, குறிப்பிட்ட பரிமாணத்தில் மட்டுமே முடிந்துபோன பிறவியைக் காண முடியும். மனிதப் பிறவியில் சில துறவிகளுக்கு மட்டுமே அத்தகைய சக்தி இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. சாதாரண மனிதர்களுக்கு அது தேவையில்லாதது என்பது என் கருத்து. <br /><br />அன்புடன்<br />பக்கிரிசாமி நீலகண்டம்<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-24203383041142720122013-08-01T16:45:35.210+10:002013-08-01T16:45:35.210+10:00நீங்கள் எழுதிவரும் தொடர் ஒரு மொழிபெயர்ப்பு மாதிரிய...நீங்கள் எழுதிவரும் தொடர் ஒரு மொழிபெயர்ப்பு மாதிரியே படிப்பவர்களுக்கு தெரியாமல் செய்வதில் நீங்கள் மிக அருமையாக வெற்றிபெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.<br /><br />மயோ கிளினிக் தளம் மிகவும் பயனுள்ளது. அதை என் மூத்த மகள் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி அவர்களுடைய தினசரி மின்னஞ்சல் சேவையையும் என்னுடைய மின்னஞ்சலுக்கு வரும்படி செய்துக்கொடுத்தாள். <br /><br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-5950156378533296212013-08-01T15:11:46.363+10:002013-08-01T15:11:46.363+10:00
//நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்தியேக தீயகுணம் உண...<br />//நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்தியேக தீயகுணம் உண்டு. பொறாமை, பேராசை எதுவாகவும் இருக்கலாம். நாம் அத்தகைய தீயகுணத்தை வரும் பிறவியில் சரிசெய்ய வேண்டும். அப்படி சரிசெய்யாத பட்சத்தில், அந்த தீயகுணத்தையும், வேறு தீய குணங்களையும் அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்ல நேரிடும். ஒருவருடைய சுமை அதிகமாகிக் கொண்டே செல்ல வாய்ப்புகள் உள்ளது. சரிசெய்யாதவர்களுக்கு அடுத்த பிறவி இன்னும் சிரமமானதாக இருக்கும். சரி செய்தவர்களுக்கு மறுவாழ்வில் சிரமம் அதிகம் இருக்காது.//<br /><br />இது உண்மையோ என்ற எண்ணம் எனக்கு வந்ததுண்டு. ஆனால் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் இன்னும் பல நடத்தி ஒருமித்த முடிவு வரும் வரை நாம் காத்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? <br /><br />நீங்கள் தந்துள்ள இணையதளம் எல்லோருக்கும் உபயோகமான தளம். பகிர்ந்தமைக்கு நன்றி!<br /><br />கடைசியில் தந்துள்ள இணைப்பு நகைச்சுவைக்குத் தான் என்றாலும், எப்படி மற்றவர்கள் செய்வதை அதனுடைய சாதக பாதகத்தை அறியாமல் அப்படியே நாம் கண்மூடித்தனமாக செய்கிறோம் என்ற பாடத்தை சொல்லாமல் சொல்கிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-74048481905990934842013-08-01T14:09:19.811+10:002013-08-01T14:09:19.811+10:00நானும் இந்த புத்தகத்தை விரும்பி படித்தேன். ஆனால் ஒ...நானும் இந்த புத்தகத்தை விரும்பி படித்தேன். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இடிக்கிறது. ஹிப்னாடிக் ட்ரான்ஸ்-ல் இருக்கும் போது ஒருவருக்கு அவருடைய வாழ்வில் நடந்தந்து மட்டும் தானே ஞாபகம் இருக்க வேண்டும். ஆனால் கேத்தரின் ஒரு மீடியமாக செயல்பட்டு அவர் மற்றவர்கள் (மற்ற ஆவி??) போல் எப்படி பேச முடியும்?? ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-44562979639413238692013-08-01T11:52:36.509+10:002013-08-01T11:52:36.509+10:00// உன் எதிர்கால வாழ்வை தேர்ந்தெடுப்பது உன் கையில்த...// உன் எதிர்கால வாழ்வை தேர்ந்தெடுப்பது உன் கையில்தான் உள்ளது. உன் வாழ்க்கையின் பொறுப்பு உன்னிடமே உள்ளது. நீயே தேர்ந்தெடுக்கிறாய்... //<br /><br />செயல்படுத்தக்கூடிய அறிவுரைகள் தான்...<br /><br />நல்லதொரு தள இணைப்பிற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1825655955450082388.post-13222342073129598372013-08-01T10:46:31.815+10:002013-08-01T10:46:31.815+10:00பரிமாணத்தில் உன்னுடைய முடிந்துபோன பிறவியைக் காணமுட...பரிமாணத்தில் உன்னுடைய முடிந்துபோன பிறவியைக் காணமுடியும்.//எனக்கும் விருப்பம்தான் உதவ முடியுமா?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com