சிக்மண்ட் ஃப்ராய்ட் (1856 – 1939) ஒரு அறிமுகம்:
அத்தியாயம்-7
மனிதனின் வளர்ச்சி நிலைகள்:
முன்பே
கூறியதைப்போல ஃப்ராய்டைப் பொறுத்தவரை, மனித சமுதாயத்தின் முக்கியமான உந்துசக்தி
பாலுணர்வே ஆகும். வாலிபப் பருவத்தின் முன்பான விடலைப் பருவம், மற்றும் பச்சிளம் பருவம்
என்று அனைத்து பருவத்துக்கும், உண்மையான உந்துசக்தி பாலுணர்வே என்று ஃப்ராய்ட்
நம்புகிறார். பருவ வயதினர்களைப் பற்றிய பாலுணர்வு கருத்துக்களை, அறிவியளாலர்கள்கூட
வெளிப்படையாக பேசிக்கொள்ளாத காலகட்டத்தில், வியன்னாவில் பச்சிளம் பருவத்தின்
பாலுணர்வு தூண்டுதல்களைப் பற்றி அறிவித்து அனைவரையும் ஃப்ராய்ட்
அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அறிவியலின்படி,
உடல்சேர்க்கையின்பொழுது ஏற்படும் மனக்கிளர்ச்சி மனிதன் பிறந்ததுமுதல் இருக்கிறது
என்பது உண்மைதான். இருப்பினும் ஃப்ராய்ட் அதனைப் பற்றி கூறவில்லை. ஃப்ராய்டின்
கூற்றுப்படி பாலுணர்வு என்பது, உடல் சேர்க்கையை மட்டும் சார்ந்தது கிடையாது. தொடு
உணர்ச்சி சார்ந்த அனைத்து, இன்பமளிக்கும் உணர்வுகளையும் பாலுணர்வு என்று அவர்
குறிப்பிடுகிறார். அணைத்துக்கொள்ளுதல், முத்தமிடுதல், ஸ்பரிசம் போன்ற அனைத்தும்,
குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று அனைத்து பிரிவினருக்கும் இன்பமளிக்கக்
கூடியதுதான் என்று எவரும் ஒத்துக்கொள்வர்.
ஃப்ராய்ட்
மனிதனின் வளரும் பருவங்களில் ஒவ்வொரு பருவத்தின் பொழுதும், தோலில் இன்பத்தை
அளிக்கும் பகுதி மாறுபடுகிறது என்று கூறுகிறார். ஃப்ராய்டுக்கும் பின்பு வந்த
அறிவியளாலர்கள் இதனை கிளர்ச்சியூட்டும் பகுதிகள் என்று குறிப்பிடுகின்றனர்.
பிறந்ததுமுதல்
பதினெட்டு மாதங்கள் வரை உள்ள பருவத்தை முதல் நிலை என்று ஃப்ராய்ட் கூறுகிறார்.
அந்தப் பருவத்தில் வாயின் வழியே குழந்தைகள் இன்பத்தை விரும்புகின்றன என்கிறார்.
பதினெட்டு மாதங்கள் முதல் நான்கு வயதுவரை அடுத்த நிலை என்று ஒவ்வொன்றாக ஃப்ராய்ட்
வகைப்படுத்தி, இறுதியாக இனப்பெருக்கத்திற்கான சேர்க்கைநிலை என்று கூறுகிறார்.
மனிதனின் குணங்கள் :
ஃப்ராய்டின்
கூற்றுப்படி இளம்பிராயத்தில் ஏற்படும் அனுபவங்களே ஒருவருடைய குணநலன் களை
வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இளம் பிராயத்தில் ஏற்படும்
அதிர்ச்சியளிக்கும் அனுபவங்கள் அவர்களுடைய குணங்களில் அதிக தாக்கத்தை
ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு அதிர்ச்சியளிக்கும் நிகழ்வுகளும் அதனுடைய தனிப்பட்ட
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மனிதனுடைய வளரும் நிலைகள் அனைவருக்கும் பொதுவானதால்,
அத்தகைய தாக்கங்களில், அனைவருக்கும் ஒரு பொருத்தமான இசைவு இருப்பதைக்
காணமுடிகிறது.
வளரும்
நிலைகளில் இயல்புக்கு மாறான அனுபவங்கள் அமையப்பெற்றவர்கள், சில குறிப்பிடத்தக்க
பிரச்சனைக்குறிய குணங்களைப் பெற்றிருப்பார்கள். அத்தகைய குணங்களை Fixation, Obsession அதாவது
ஆட்டிப்படைக்கும் தன்மையுடைய குணங்கள் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார்.
மழலைப் பருவத்தில்
பால்குடிக்கும் அனுபவத்தைப் போதுமான அளவு பெறாதவர்கள் மந்தமான வாய் உணர்வு
பெற்றவர்களாக இருப்பார்கள் என்று ஃப்ராய்ட் கூறுகிறார். அவர்கள் பெரியவர்கள்
ஆனபிறகும் அடுத்தவர்களை சார்ந்திருப்பர். மற்றும் புகை, குடி போன்ற பழக்கங்களும்
கொண்டவர்களாக இருக்கக்கூடும் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். அவர்கள்
மழலைப்பருவத்தில் இழந்த இன்பத்தைத் தேடுவதாக கூறுகிறார்.
இதனைப்போலவே பல் முளைக்கும்
பருவத்தில் கடித்துப் பழகும் இன்பத்தை இழந்தவர்கள் ஆக்ரோஷமான வாய் உணர்வு
பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும் ஃப்ராய்ட் கூறுகிறார். அவர்கள் பெரியவர்கள்
ஆனபிறகு பேனா, பென்சிலைக் கடிப்பது போன்ற பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிகவும் கோபம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்றும் ஃப்ராய்ட் கூறுகிறார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது
என்பதற்கேற்ப ஒரு முனைக்குத் தள்ளப்பட்டவர்கள் தீவிரமாக எதிர் நிலைக்கு
மாறிவிடவும் வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட அதிர்ச்சிக்கு ஆளானவர்களுக்கு அதன்
விளைவாக சில குறிப்பிடப்பட்ட குணங்கள் தோன்றுவதற்கு சாத்தியங்கள் உள்ளது. அல்லது
அதற்கு எதிர் மாறாகவும் குணங்கள் தோன்றவும் வாய்ப்பு உள்ளது. இதனால்
அறிவியலாளர்களுக்கு ஒரு திடமான பாதையை சரியென்று தேர்ந்தெடுப்பதில் சிரமம் உள்ளது.
ஆனால் எப்பொழுதுமே, இதுவே இயற்கையின் குணமாக அமைந்துவிடுகிறது.
---
தொடரும்.
ப்ளாட்டோவின் பொன்மொழிகள்
:
நல்ல வேலைக்காரனாக இல்லாதவனால், நல்ல முதலாளியாகவும் இருக்க முடியாது.
தேவையே
புதிய படைப்புகளுக்கு தாயாகிறது.
சிறிய
கற்களின் உதவியின்றி பெரிய கற்கள் நிற்பதில்லை.
மௌனம்
சம்மதமாகும்
நற்செயல்கள்
ஒருவரின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது; ஏனையவர்களுக்கு அது நற்செயல் புரிய
தூண்டுகோலாகிறது.
அரசியலில்
ஈடுபடாமல் இருப்பவர்களுக்கான தண்டனை, அவர்களைவிட தகுதி குறைந்தவர்களால் ஆளப்படுவதே.
அறியாமையே
அனைத்து பாவங்களுக்கும் வேராகிறது.
நல்லவர்கள்
நேர்மையாக, பொறுப்புடன் நடந்துகொள்ள சட்டம் தேவையில்லை; தீயவர்களுக்கு சட்டம்
இருந்தும் பயனில்லை.
வெற்றிகளிலேயே
பிரதானமான வெற்றி, தன்னைத்தானே வெற்றி கொள்வதேயாகும்.
மரணமடைந்தவர்களே
போரின் முடிவுவரை பார்த்திருப்பார்கள்.